Thursday, May 8, 2008

இரவுகள் வண்ணத்துப்பூச்சிகளைப் போன்றவை

இன்று என்ன நிகழும் என்ற ஆவலோடு வருகிறேன்
ஒரு வண்ணத்துப்பூச்சியைப்போல இன்னொன்று இருப்பதில்லை
ஒரு இரவைப்போல இன்னொன்று இருப்பதில்லை!

******

உன் கட்டுப்பாடு
என்னை எதுவும் செய்ய முடிவதில்லை
உன் காதல்
என்னை என்ன வேண்டுமானாலும் செய்துவிடுகிறது !

******

காற்றுக்கும் மழைக்கும்
பல்வேறு வடிவங்கள்
உனக்கிருப்பதைபோலவே !

******

அள்ளிச்செல்லும் அழகு
பொங்கி வழியும் சிரிப்பு
அழைக்கும் கண்கள்
இரங்கும் மனது
நிறைக்கும் அன்பு
எல்லாம் உன்னைப்போலவேதான்
ஆனால்
இவள் நீயல்ல !

.

2 comments:

thamizhparavai October 28, 2008 at 7:31 PM  

நன்று

ஸ்ரீதர்ரங்கராஜ் March 12, 2009 at 7:22 PM  

என்னத்த சொல்ல.பிரிச்சு மேஞ்சுட்டீங்க பாஸ்.கலக்கிட்டீங்க போங்க.

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP