Wednesday, April 8, 2009

மற்றும் காமம்..

நேற்றிரவு
‘அத்தைமடி மெத்தையடி..’
பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தோம்
மாசமாக இருக்கும்
என் தங்கைக்கு
போன் செய்யத்துவங்கினாய் நீ.!

********

நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பு
மற்றும் காமம்.!

********

உன் அறிவும் திறனும் ஆளுமையும்
என்னை வியக்கச்செய்கிறது
இருப்பினும்
இரவுகளில்
ஒரு மாணவியைப்போல
இரந்து நிற்கிறாய்.!

********

ஒரு தக்கையைப்போல
காதலின் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டேயிருந்தேன்
நீ வந்தாய்,
ஒரு கல்லைப்போல
மூழ்கிப்போய்விட்டேன்.!

.

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP