Saturday, September 20, 2008

இரண்டாவது இரவு

திருமண‌மாகி பல நாட்களுக்குப்பிறகு
முதல் முறையாக நீ அழைத்த அந்த நாளை
நினைவிருக்கிறதா உனக்கு?
அன்றுதான் நிகழ்ந்தது அந்த இரண்டாவது இரவு.

*******

காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்.!

*******

எல்லா நேரங்களிலும்
ஒரு குழந்தையைப்போல
தெரிந்துகொள்வதற்காக‌
என்னையே சார்ந்து நிற்கிறாய்.
இர‌வுக‌ளில்நான் உன்னைச்சார்ந்து நிற்கிறேன்.

*******

என‌க்கான
அழ‌கு, காத‌ல், காம‌ம்
இம்மூன்றையும்
உன் ஜ‌டையைப்போல‌ பின்னிக்கொண்டேயிருக்கிறாய்.!


  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP