Saturday, May 24, 2008

மழையாக வந்தாய்!

தாளமுடியாத வேட்கையில் வெடித்துக்கிடந்தேன்
உடலும் மனமும் குளிரக் குளிர மழையாக வந்தாய்.!

******

எல்லாத்திசைகளிலிருந்தும் உன்னைத் தழுவமுடியவில்லையே
இந்தக் காற்றைப்போல.!

******

பார்த்துக்கொண்டிருக்கும்போதே
பிரமாண்டமாகிவிடுகிறது உன் அழகு
இந்த மனிதப் பார்வை போதவில்லை எனக்கு.!

******

உறங்கிக்கொண்டிருக்கும் உன்னைத் தொல்லை செய்யவேண்டும்
உடுத்திக் கொண்டிருக்கும் உன்னைத் தொல்லை செய்யவேண்டும்
உணவெடுத்துக் கொண்டிருக்கும் உன்னையே
உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்
உன்னைச் சேரவேண்டிய காதலால் நிரம்பி
மூர்ச்சையடைந்துகொண்டிருக்கிறேன்...
எல்லாம் முடிந்துவிடும் முன்பே வா !

.

1 comments:

Joe March 9, 2009 at 10:05 AM  

//எல்லாத்திசைகளிலிருந்தும் உன்னைத் தழுவமுடியவில்லையே
இந்தக் காற்றைப்போல.! //

"பிரமாதம்" என்பது சாதாரண வார்த்தையாக தோன்றுகிறது.

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP