Friday, July 25, 2008

சிரிப்பாய் சிரிக்கும் கவிதைகள்

கவிதைகளை
எப்போதுமே
ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.
உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து
கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன!

*****

ஒவ்வொரு நாளும்
அலுவலகம் கிளம்பும்போதும்
மழையைப் போலவே என்னைத்தடுக்கிறாய்.
வெளியே மழையாகவும்
உள்ளே குடையாகவும்
ஒரே சமயத்தில் நீ.
உன் மீதான விருப்பமா தணியப் போகிறது?
இந்த மழையில் நனைந்தேதான்
இந்த வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது.!

*****

ஒரு பெண்ணைப் பார்க்கவென்று
சொல்லித்தான்
என்னை அழைத்துவந்தனர்,
உன்னைப்பார்ப்பேன் என்று
நான் நினைக்கவுமில்லை.!

*****

தீவிரமான அலுவலில் மூழ்கியிருக்கும் போதும்
உனக்கான ஒரு கவிதை
நெஞ்சில்
உருவாகிக்கொண்டேயிருக்கிறது.

.

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP