முதல் இரவு
இத்தனை வருடக் காத்திருத்தலுக்குபின்
வந்த
அந்த முதல் இரவு கூட
சில மணி நேரங்களே விழித்திருந்தது.
******
வாழ்வின் வழிநெடுகிலும்
தவிக்கின்ற தாகத்தைத் தீர்க்கின்ற
மழையாய்
இந்தக்காதல்
இருந்துகொண்டேயிருக்கிறது.!
******
நான் கொதிக்கும் நீரைப்போல
ஆவியாகிறேன்
நீ குளிர்ந்த காற்றைப்போல
நீராகிறாய்.!
******
ஒரு ஒளிப்புள்ளி ஒளிவட்டமாய் சிதறுவதைப்போல
என் காதல் உன்னைச் சுற்றிலும்
சிதறிக்கொண்டேயிருக்கிறது.
.