நீ இல்லாமலும் கூட..
அன்பான கணவன்
நீ கேட்டதைப்போலவே அழகான இரு பெண்கள்
நீ இல்லாவிட்டாலும் கூட
நான் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன் !
******
நீ மகிழ்ந்தால் மகிழ்வேன்
நீ அழுதால் அழுவேன்
வாழ்வின் வழிநெடுக
நீயறியாமல் உன்னைத் துரத்திக்கொண்டேயிருப்பேன்
ஒரு ஒற்றனைப்போல.!
******
காதல் பகலைப்போன்றது
காமம் இரவைப்போன்றது !
******
இளமை கொப்பளிக்க
இளம்பெண்கள் கடந்து போகும் போதெல்லாம்
காமம் ஆர்ப்பரிக்கின்றது!
காதல் அமைதிகாக்கின்றது!
.
1 comments:
Thanks roshini!
Post a Comment