Thursday, May 8, 2008

நீ இல்லாமலும் கூட..

அன்பான கணவன்
நீ கேட்டதைப்போலவே அழகான இரு பெண்கள்
நீ இல்லாவிட்டாலும் கூட
நான் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன் !

******

நீ மகிழ்ந்தால் மகிழ்வேன்
நீ அழுதால் அழுவேன்
வாழ்வின் வழிநெடுக
நீயறியாமல் உன்னைத் துரத்திக்கொண்டேயிருப்பேன்
ஒரு ஒற்றனைப்போல.!

******

காதல் பகலைப்போன்றது
காமம் இரவைப்போன்றது !

******

இளமை கொப்பளிக்க
இளம்பெண்கள் கடந்து போகும் போதெல்லாம்
காமம் ஆர்ப்பரிக்கின்றது!
காதல் அமைதிகாக்கின்றது!

.

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP