Wednesday, April 23, 2008

நீரைப்போலவே நீயிருக்கிறாய்

ஒளி உன்னை ஊடுருவுகிறது
மலர்கள் உன்மீது மிதக்கின்றன
தென்றல் உன்னுடன் சலசலக்கிறது
வேட்கை தணிவிக்கிறாய்
நான் நீடித்திருக்க உயிர்ப்பொருளாகிறாய்..
நீரைப் போலவே நீயிருக்கிறாய்.!

*******

வெட்டுப்பட்ட இடங்களிலெல்லாம் துளிர்த்துக்கொண்டேயிருக்கும்
முருங்கையைப் போன்றது
உனக்கும் எனக்கும் இடையேயான காதல்.!

*******

விடிந்து விடப்போகிறதே
என்ற கவலை வேண்டாம் உனக்கு,
இரவை நீட்டித்துக்கொடுப்பாள் அவள்.!

*******

நடு இரவில் நெருங்கிவந்து
என் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்.
நீ விழித்திருக்கிறாய் என்பது உறக்கத்திலும் புரிகிறது
காதல் எளிதான வரையறைக்குள்
சிக்கிவிடும் சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று!

.

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP