வெட்கத்தால் செய்யப்பட்ட அழகு!
தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொள்
என்றேன்
சிணுங்கினாய்
தேவதைகள் தங்களை
வெளிப்படுத்திக் கொள்ள
மொழிகள்
தேவையில்லை என்று தோன்றியது எனக்கு.!
********
ரயிலடியில்
மழைபெய்தாலே போதும்..
உன் ஞாபகத்தில்
என் நினைவுகள்
‘சொத சொத’வென நனைந்துவிடுகின்றன.
********
உன் வெட்கத்தையெல்லாம்
கூட்டிச் சேர்த்து செய்யப்பட்டதுதான்
உன் அழகு!
நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது.
********
என் காதல்
திசைமறந்த ஒரு வண்டைப்போல
உன்னையே சுற்றிச் சுற்றி வருகிறது.
.
19 comments:
//தேவதைகள் தங்களை
வெளிப்படுத்திக் கொள்ள
மொழிகள்
தேவையில்லை என்று தோன்றியது எனக்கு//
தேவதைகளுக்கு மொழி தேவையில்லை தான் போலும்...மிகவும் ரசித்தேன்...
//உன் வெட்கத்தையெல்லாம்
கூட்டிச் சேர்த்து செய்யப்பட்டதுதான்
உன் அழகு!
நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது.//
கரும்பான...குறும்பான... கவிதை...
//நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது//
!!!!!!!!!!!!!!!!!!!!
//உன் வெட்கத்தையெல்லாம்
கூட்டிச் சேர்த்து செய்யப்பட்டதுதான்
உன் அழகு!
நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது.//
காதல் வழியும் கவிதைகள்.. நல்லா இருக்கு நண்பா..
காதல் பொங்கி வழிகிறது. எங்களையும் நனைக்கிறது
இந்த வலைப்பூ காதல் கவிதைகளுக்கு மட்டுமே என்று நினைக்கிறேன். ஒரு வாழ்த்தும் சொல்லிக் கொள்கிறேன்.
அனுஜன்யா
தலைப்பின் தேர்வு மிக அருமை!!
ஒவ்வொரு குறுங்கவிதைகளிலும் காதலை நன்கு பிழிந்து பொழிந்திருக்கிறீர்கள்.. அந்த பொழிவுகள் சொட்டுச்சொட்டாக எழுத்துக்களாக வந்து அமர்ந்திருக்கின்றன.
தொடர்ந்து எழுதுங்கள் தாமிரா(எ)ஆதிமூலகிருஷ்ணன்..
வாழ்த்துகள்
\\உன் வெட்கத்தையெல்லாம்
கூட்டிச் சேர்த்து செய்யப்பட்டதுதான்
உன் அழகு!
நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது.\\
********>>>>>>>
ரசித்தேன்!
ஷைலஜா
very nice!
////
தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொள்
என்றேன்
சிணுங்கினாய்
தேவதைகள் தங்களை
வெளிப்படுத்திக் கொள்ள
மொழிகள்
தேவையில்லை என்று தோன்றியது எனக்கு.!
///
தமிழ் தெரியாதா!!1
நல்லாயீருக்கு
அனைத்தும் அழகு :))
ஒவ்வொன்றிலும் காதல் வழிகிறது!
வாழ்த்துக்கள் தோழரே!
நன்றி புதியவன்.!
நன்றி அத்திரி.!
நன்றி பாண்டியன்.!
நன்றி முரளி.!
நன்றி அனுஜன்யா.!
நன்றி ஆதவா.!
நன்றி ஷைலஜா.!
நன்றி மங்களூர்.!
நன்றி பிரபு.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி ஷீ-நிசி.!
அட என்னங்க நீங்க தபூ சங்கர் விட அதிகமா காதலிக்கிறீங்க
இந்த வலைத்தளம் எப்போருந்து? சூப்பரா இருக்கு கவிஞரே!
25
படிச்சேன், படிச்சேன், கொஞ்சநேரம் படிச்சுக்கிட்டே இருந்தேன் நான் காதலை இப்படி எழுதி எத்தனை நாளாகிவிட்டது...
காதல் காதல் காதல்
காதலன்றி வேறில்லை உங்கள் அன்பு கவிதையில்.
அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://jackpoem.blogspot.com
சிணுங்கினாய்
தேவதைகள் தங்களை
வெளிப்படுத்திக் கொள்ள
மொழிகள்
தேவையில்லை என்று தோன்றியது எனக்கு.!
இந்த வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
aththanaiyum kaathaal.........!
Post a Comment