சிரிப்பாய் சிரிக்கும் கவிதைகள்
கவிதைகளை
எப்போதுமே
ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.
உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து
கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன!
*****
ஒவ்வொரு நாளும்
அலுவலகம் கிளம்பும்போதும்
மழையைப் போலவே என்னைத்தடுக்கிறாய்.
வெளியே மழையாகவும்
உள்ளே குடையாகவும்
ஒரே சமயத்தில் நீ.
உன் மீதான விருப்பமா தணியப் போகிறது?
இந்த மழையில் நனைந்தேதான்
இந்த வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது.!
*****
ஒரு பெண்ணைப் பார்க்கவென்று
சொல்லித்தான்
என்னை அழைத்துவந்தனர்,
உன்னைப்பார்ப்பேன் என்று
நான் நினைக்கவுமில்லை.!
*****
தீவிரமான அலுவலில் மூழ்கியிருக்கும் போதும்
உனக்கான ஒரு கவிதை
நெஞ்சில்
உருவாகிக்கொண்டேயிருக்கிறது.
.
22 comments:
//கவிதைகளை எப்போதுமே ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து கவிதைகள் என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன!//
ஆஹா... கவுஜ... கவுஜ....
ஆட்டோ கவுந்ததை கூட இவ்வளவு கவுஜயா யோசிக்க முடியுதுங்க பாருங்க. அங்கதான் நீங்க ஸ்டூல்ல குந்திக்கினு கீறிங்க :))
//
ஆட்டோ கவுந்ததை கூட இவ்வளவு கவுஜயா யோசிக்க முடியுதுங்க பாருங்க. அங்கதான் நீங்க ஸ்டூல்ல குந்திக்கினு கீறிங்க :))
//
ரிப்பீட்டு
கவுஜை
கொடுமை
:)))
சரிங்க ஒத்துக்கிறேன்..
இது கவிதைதான்..
நீங்க கவிஞர்தான்!
//ஆட்டோ கவுந்ததை கூட இவ்வளவு கவுஜயா யோசிக்க முடியுதுங்க பாருங்க. அங்கதான் நீங்க ஸ்டூல்ல குந்திக்கினு கீறிங்க //
பாராட்டுக்கு நன்றி சென்ஷி!
நன்றி மங்களூர்! (இன்னா கால வாருறியா தல.. இன்னும் நெறய வெச்சிக்கிறேன். எடுத்து உட்டேன்னு வெச்சுக்கோ.. மெரிசலாயிடுவ, பரிசலை பாத்தில்ல..ஜாக்கிரத!)
நன்றி பரிசல்!
அவனா(ரா) நீயி(ங்க) :-)
வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com
//ஆட்டோ கவுந்ததை கூட இவ்வளவு கவுஜயா யோசிக்க முடியுதுங்க பாருங்க. அங்கதான் நீங்க ஸ்டூல்ல குந்திக்கினு கீறிங்க :))
//
Repeatuuu... :))
பொண்ணு பாத்த பின்னாடிதானே? கல்யானம் ஆனபின்னாடி கவிதைகள் கொலைவெறியாய் சிரிக்கும் பாருங்க...
// நந்து f/o நிலா said...
பொண்ணு பாத்த பின்னாடிதானே? கல்யானம் ஆனபின்னாடி கவிதைகள் கொலைவெறியாய் சிரிக்கும் பாருங்க...
//
ripeettei..
;)
உங்க கவிதை ரொம்பவே நல்லா இருக்குங்க. எங்க உக்காந்து யோசிச்சா இப்டியெல்லாம் கவிதை வரும்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா உங்களுக்கு பின்னால (அந்த பின்னால இல்லைங்க) கவிதை எழுத முயற்சி பண்றவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்குஞ்சாமியோவ்....
நன்றி ஷ்யாம்.!
நன்றி விவேக்.!
நன்றி ஜி.!
நன்றி நந்து.! (அதான் சிரிப்பா சிரிக்குதே..)
நன்றி குமார்.! (ஆமா, கல்யாணம் ஆயிடுச்சா.. அப்புறம் எப்புடி கவுஜயெல்லாம் எழுதுறீங்க.. அதுவும் நல்லா.!)
நன்றி தோழி.! (எப்பிடினு தனியா பதிவு போட்டுறலாமா?.. சரி சரி..போடலை அதுக்காகல்லாம் அடிக்க வரக்கூடாது)
Super Selvakkumar!
ஆகா தாமிரா, நீங்க கவிதையும் எழுதுவீங்கன்னு தெரியாதே....
அழகாய் அனுபவப்பூர்வமாய் இருக்கு கவிதைகள் :)
**************************
கவிதைகளை
எப்போதுமே
ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.
உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து
கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன
!*********************************
நல்ல வரிகள் தான்...இன்னும் எழுதுங்கள் நீங்கள்.
கவிதைத் துவம் மேம்பட வாழ்த்துக்கள்.
--ரவிஷ்னா
நல்லாருக்கு :))
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தாமிரா!!!
என்னாச்சு தாமிரா? ஏன் இப்பிடி. கொஞ்சம் குறைச்சுக்கப் பாருங்க.
அன்னே, அசத்தல் கவித, இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்...
//நந்து f/o நிலா said...
பொண்ணு பாத்த பின்னாடிதானே? கல்யானம் ஆனபின்னாடி கவிதைகள் கொலைவெறியாய் சிரிக்கும் பாருங்க...//
hahahahaha great fun!!
anbudan aruna
simply superb......
Post a Comment