இரவுகள் வண்ணத்துப்பூச்சிகளைப் போன்றவை
இன்று என்ன நிகழும் என்ற ஆவலோடு வருகிறேன்
ஒரு வண்ணத்துப்பூச்சியைப்போல இன்னொன்று இருப்பதில்லை
ஒரு இரவைப்போல இன்னொன்று இருப்பதில்லை!
******
உன் கட்டுப்பாடு
என்னை எதுவும் செய்ய முடிவதில்லை
உன் காதல்
என்னை என்ன வேண்டுமானாலும் செய்துவிடுகிறது !
******
காற்றுக்கும் மழைக்கும்
பல்வேறு வடிவங்கள்
உனக்கிருப்பதைபோலவே !
******
அள்ளிச்செல்லும் அழகு
பொங்கி வழியும் சிரிப்பு
அழைக்கும் கண்கள்
இரங்கும் மனது
நிறைக்கும் அன்பு
எல்லாம் உன்னைப்போலவேதான்
ஆனால்
இவள் நீயல்ல !
.
2 comments:
நன்று
என்னத்த சொல்ல.பிரிச்சு மேஞ்சுட்டீங்க பாஸ்.கலக்கிட்டீங்க போங்க.
Post a Comment